Sunday, October 11, 2009

என் மனம் VS உன் புன்னகை!!


நீ
இல்லாத போது, 
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது” 
என்று சத்தியம் 
போடுகிறது 
இந்த மனம்..  
பாவம் அதற்கு 
தெரியாது போலும்..
உன் ஒற்றைப்புன்னகை 
ஒராயிரம் சத்தியங்களை 
தகர்த்து விடும் என்று!!
****************************************

போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு அபராதம் 
விதித்தால், என்னை
மன்னித்து விடு.. 
என் இதயத்தை 
மாசுபடுத்தியதாக 
உன் மீது புகார்
கொடுத்து விட்டேன்... 
****************************************
நீர் 
புகாத கடிகாரம்
போல் 
காதல் புகாத இதயம், 
விற்பனைக்குக் 
கிடைத்தால் சொல்.. 
வாங்கிக்கொள்கிறேன்.. 
பழைய இதயத்தை 
முழுவதும் 
ஆக்கிரமித்து விட்டாய் 
நீ!!!
*************************************
வேகமாய் வரும்
தும்மலை அடக்கினால்
இரத்தக்குழாய் 
வெடித்து விடுமாம்.. 
என் 
மேல் வரும் 
காதலை நீ அடக்கினால், 
எனக்கு இதயமே 
வெடித்து விடும்.
*************************************
என் இனியா..! 
மூன்றாம் உலக யுத்தம்
நடக்க வேண்டும்.. 
அதில் நீயும் நானும் 
மட்டும் 
பிழைக்க வேண்டும்.. 
புதிதாய் நாம் 
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,  
நான் ஒரு காதல் ஹிட்லரடி 
நீதான் எந்தன் ஜெர்மனி!!!
**************************************** 
 
அன்பு மழையுடன்,
அருண் !!

6 comments:

  1. //
    என் இனியா..!
    மூன்றாம் உலக யுத்தம்
    நடக்க வேண்டும்..
    அதில் நீயும் நானும்
    மட்டும்
    பிழைக்க வேண்டும்..
    புதிதாய் நாம்
    ஒரு காதல் உலகை
    படைக்க வேண்டும்!
    ஆமாம்,
    நான் ஒரு காதல் ஹிட்லரடி
    நீதான் எந்தன் ஜெர்மனி!!!
    //

    :-)) ம்... நான் என்ன பாவம் செய்தேன். ஒரு புறம் நானும் பிழைத்து விடுகிறேன்.
    அருமை.. சிந்தனையும் வார்த்தை பிரயோகமும்

    ReplyDelete
  2. என்
    மேல் வரும்
    காதலை நீ அடக்கினால்,
    எனக்கு இதயமே
    வெடித்து விடும்./////

    உன்மேல் இல்ல?

    நல்லாருக்கு!
    கடைசி கவிதை கொஞ்சம் காமெடியா இருந்தது,,,, தப்பா நெனச்சுக்காதீங்க :)

    ReplyDelete
  3. @ U.P.Tharsan
    நன்றி ..கவலை படாதீங்க நிலவுல தான் தண்ணி வருதே இப்போ ..உங்களை அங்கே தங்க வைக்கிறோம்
    :) சிந்தனை னு என்னமோ பெரிய பாராட்டு லாம் கிடைக்குது ..கைப்புள்ள நெசமா டா இது !
    நன்றி மச்சான்..

    ReplyDelete
  4. @ pappu
    யாருப்பா அது
    "பிரபல பதிவர் பப்பு" வா ? அதிசயம் .. உண்மையிலே "மச்சான்ஸ் " பதிவு கலக்குததா ? !

    தேங்க்ஸ் மச்சி !! ரொம்ப பீலிங்க்ஸ் ல எழுதினா காமெடி னு ஒரே வார்த்தைல கலாயிக்கிறியே மாப்பு :)

    ReplyDelete
  5. ரசிக்கிறேன் உங்கள் ரசனைகளை, அடிக்கடி வருகிறேன், தொடர்ந்து எழுதுங்கள்
    நீங்களும் வாருங்கள்.
    சந்திப்போம்

    ReplyDelete
  6. @rajan
    நன்றி மச்சான் ! உங்க படமும் , கருத்துகளும் அருமை!
    அடிக்கடி சந்திப்போம் !

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...