Friday, August 17, 2012

இருளினுள்...



உன்னுடன் சேர்ந்த 
மயக்கங் கொண்ட 
பொழுதுகள் - சிம்பொனி
இரவின் சிலிர்ப்புகள் !

நம் தனிமை யூடல்கள் 

கவிதை காதல்கள்
விரல்கள் கோர்த்த 
இருபாத நடை,
விழிகள் பிரியா
தனிநிழல் சிறை !

மௌன மொழிகள் 

முத்தப் போர்கள் !
'இச்' - உயிர்மெய், முதல் பாதம்.
தொடர்க,
'ப்ச்' - மெய்யுடன் மெய் !

இறுக்கம் அடர்ந்த 

மூச்சுக் காற்றில் 
கவனம் சிதறி 
இயற்கை பிரளும் !

ஸ்பரிச கோடுகள் 

இறுக்கம் சேர்க்க 
விழிமூடினும் பொருள் 
தேடுது - இருள் 
காட்டிலொரு கலவிக் காதல்.

 - சிவன் 

Wednesday, February 15, 2012

உன் இன்மை




புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல் 
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி 
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை 
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.

*****

மிரளச்செய்யும் அன்பு 
மிரட்சி கலந்த ஆளுமை 
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல் 
முழித்து விழிக்கையில் 
கடந்து விடுகிறது 
இன்னுமோர் இரவு!

*****

மழை விரும்பா தாவரம் 
எரிதழல் தீண்ட எஸ்கிமோ 
உன் விலகலில் நான். 
*****                                                                         - அருண்.இரா
Related Posts Plugin for WordPress, Blogger...