Wednesday, October 7, 2009

பள்ளிக்கூடக் காதல்...!!!


உடைந்து விழுந்தது
வானத்து நிலா
கலைந்து சென்றன
மழை மேகங்கள்
இருண்டே விடிந்தது
இன்றைய பொழுது
கறுப்புத் தினமாய்
குறித்து வைத்தேன்
நீ !!!
' நிவேதா' -
“ அவ இன்னக்கி லீவ் மிஸ் ”.



வேண்டுமென்றதான்
கணக்கு பாடத்தை
மறந்து வந்தேன்,
உன்னை விட்டு
குட்டச் சொல்லுவார்கள்
என்பதால் !!!
பின்னர்,
குட்டிய கையாலே
கோதியும் விடுவாய்
வலிக்குதா என்று
கேட்டுக்கொண்டே...!!
வலிக்கவேயில்லை,
நீ என்னை
பிரியாதிருந்த வரையில் !!!
தொடரும்
- இப்படிக்கு சிவன்.

8 comments:

  1. குழந்தைகள் படம் அழகு...

    ReplyDelete
  2. அருமை...மச்சான்

    ReplyDelete
  3. அருமை...மச்சான்

    ReplyDelete
  4. //பின்னர்,
    குட்டிய கையாலே
    கோதியும் விடுவாய்
    வலிக்குதா என்று
    கேட்டுக்கொண்டே...!!
    வலிக்கவேயில்லை,
    நீ என்னை
    பிரியாதிருந்த வரையில் !!! ///

    உங்கள் கவிதையில் ஒரு வலி இருக்கிறது ...........
    வலி உள்ளவனே படைப்பாளி வாழ்த்துக்கள் ...........
    அவன் வலிக்கவில்லை என்று சொல்லும் போது..........
    காதலின் வலி இருக்கிறது

    ReplyDelete
  5. @பிரியமுடன்...வசந்த் -
    வசந்த் மச்சான்...நீங்க விஷயத்தை நேரடியாவே சொல்லிருக்கலாம் :)

    ReplyDelete
  6. @பாரதிசெல்வன் - ரொம்ப நன்றி பாரதிசெல்வன்.

    ReplyDelete
  7. @SUREஷ் - ரொம்ப நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. @ வெண்ணிற இரவுகள் - என்ன சார்...உங்களுக்குள்ளயும் ஒரு வலி இருக்கும் போல....!!!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...