
புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல்
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.
*****
மிரளச்செய்யும் அன்பு
மிரட்சி கலந்த ஆளுமை
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல்
முழித்து விழிக்கையில்
கடந்து விடுகிறது
இன்னுமோர் இரவு!
*****
மழை விரும்பா தாவரம்
எரிதழல் தீண்ட எஸ்கிமோ
உன் விலகலில் நான்.
***** - அருண்.இரா
அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDelete