Wednesday, November 11, 2009

அனுமாரும் நானும்.

மை டியர் மச்சான்ஸ்,

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க அவங்க MIND VOICE- "என் சோக கதைய கேளு தாய்க்குலமே" - பாட்டை ஒடவிட்டீங்கனா கரெக்டாஇருக்கும்.

உங்களுக்கெல்லாம் லார்ட் ஆஞ்சநேயா எபெக்ட்-னா என்னனு தெரியுமா?? (ஐய்யயோ இது அஜீத் நடிச்ச ஆஞ்சநேயா இல்லை..)

.கே நானே சொல்றேன் மச்சான்ஸ். ஒரு சின்ன FLASHBACK- இருந்து என் கதைய ஆரம்பிக்கிறேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்து, ஆஞ்சநேயர் மேல மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பக்தி. என்னடா விஷயம்னா, அவர்தாங்க அப்ப எனக்கு சாமிகள்லேயேஸ்ட்ராங்கான சாமியா தெரிஞ்சாரு. அதனால ஆஞ்சநேயர கும்பிட்டா நெறையா சக்தி கெடைக்கும், பலம் வரும்னு எப்பவுமே ஆஞ்சநேயர மட்டும்தான்கும்பிடுவேன்.

கரெக்டா அந்த நேரம்னு பார்த்து எங்க அப்பாக்கு வேற சோளிங்கர்-ன்ற ஊருக்கு மாறுதல் கிடைச்சது. சோளிங்கர்- என்னடா விஷேசம்னா அங்கஆஞ்சநேயர்க்குன்னு சின்ன மலை கோவிலே இருக்கு. ஏற்கனவே நமக்கு ஈடுபாடு அதிகம், இதுல மலைக்கோவில் வேற கேக்கணுமா, அப்ப அப்ப பிக்னிக்போறா மாதிரி மலைக்கோவிலுக்கு கெளம்பிடுவோம்.

எனக்கு அப்பெல்லாம் வடைல ரொம்ப ஆர்வம் இருந்ததே இல்ல... (வடையா ??? மேல படிங்க மச்சான் புரியும்).

லைட்டா நமக்கு வயசு ஏற ஏற இந்த ஈடுபாடு கொஞ்சம் கொறஞ்சது.... பசங்களோட நெறையா சேந்து வடை கெடக்குற எடத்துக்கெல்லாம் போவோம்...அப்பத்தான் அப்பாக்கு இன்னொரு மாறுதல் வந்து வேற ஊருக்கு போனோம். அங்க ஒரு ஸ்கூல்ல பதினோராவதுல சேர்ந்தேன். நமக்கு இப்ப ஆஞ்சநேயர்மேல இருந்து ஈடுபாடு ரொம்ப கொறஞ்சு போயிருந்துச்சு...முருகனும் முக்கியமா கிருஷ்ணரும் தான் இப்ப நம்ம இஷ்ட தெய்வமா தெரிஞ்சாங்க.

ஆனாலும் சின்ன வயசுல இருந்து நான் ஒரு தீவிர ஆஞ்சநேய பக்தரா இருந்ததால, அவருக்கும்(ஆஞ்சநேயர்) என்ன ரொம்ப புடிச்சு போச்சு போல. அவரோடஎபெக்ட் நம்மள அப்ப அப்ப கிராஸ் பண்ணும். இங்கதான் மச்சான்ஸ் லார்ட் ஆஞ்சநேயர் எபெக்ட் பயங்கரமா வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுது.

பதினோராவதுல சேரும் போது நம்ம ஆர்வமெல்லாம், இந்த ஸ்கூல்ல எத்தன வடை இருக்கு, நம்ம க்ளாஸ்ல எத்தன வடை இருக்கும்னு தான். மொத நாள்எல்லாரையும் ஒண்ணா ஒக்கார வைச்சு வெல்கம் ஸ்பீச் கொடுத்திட்டு இருந்தாங்க. அப்பத்தான் சொன்னாங்க என் க்ளாஸ்ல மொத்தம் தொண்ணூறு பேர்,இதுல நாப்பது மட்டும்தான் பசங்கன்னு.

டக்குன்னு நம்ம மைண்டுக்குள்ள ஏகப்பட்ட கால்குலேஷன், அம்பது வடா, you mean FIFTY VADA, அப்படின்னு என்ன என்னவோ நானே தனியா பேசிட்டுஇருந்தேன். லார்ட் முருகா, லார்ட் கிருஷ்ணா உங்க கருணையே கருணை, உங்கள கும்பிட ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே இப்படி ஒரு எபெக்டா....???

இவ்வளவு தாங்க அவங்கள புகழ்ந்து சொன்னேன், இது ஆஞ்சநேயர் காதுல விழுந்திடுச்சு போல, நம்மதான் அவரோட தீவிர பக்தர் ஆச்சே அதெப்படி நம்மளஇப்படி அம்பது பேருக்கு நடுவுல விடுவாரு.

இதெயெல்லாம் சொன்ன அதே வாத்தியாரு, பயாலஜி க்ரூப்புல தொண்ணூறு பேரு இருக்குறதால, அந்த க்ளாஸ மட்டும் ரெண்டா பிரிக்குறோம், பசங்கஎல்லாம் '' செக்ஷன், பொண்ணுங்க எல்லாம் 'பி' செக்ஷன்-னு சொன்னாரு.

"ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

வேற என்ன செய்யுறது, மீதி ரெண்டு வருஷத்தையும் அந்த ஸ்கூல்ல நாப்பது பசங்களோட குப்ப கொட்டிட்டு வந்தேன்.

சரி ஆனது ஆச்சு, நம்ம காலேஜ்ல பாத்துக்கலாம்னு மனச தேத்திக்கிட்டேன்.... எத்தன படத்துல காலேஜ பாத்திருப்பேன்... எல்லாம் அந்த நெனப்புதான்....

இன்ஜினியரிங் காலேஜ் உள்ள போன பொறவு தான் தெரிஞ்சது, எல்லாமே கப்சானு. சரி மெகானிகல் எடுத்தா வேலைக்கு ஆகாது, கம்ப்யூட்டர் போலாம்னா நமக்கு சுவிட்ச் போடறத தவிர அதுல வேற எதுவுமே தெரியாது அப்படின்னு எல்லாம்யோசிச்சு எலெக்ட்ரானிக்ஸ் எடுத்தேன். க்ளாஸ்ல அறுவது பேருன்னு சொன்னாக, கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு.

சரின்னு அங்க போய் பார்த்தா, நமக்கு முன்னாடியே நம்ம லார்ட் ஆஞ்சநேயர் வந்து வொர்க் அவுட் பண்ணிடாருங்க. க்ளாஸ்ல அறுவது பேருல மூணே மூணுமட்டும் தான் வடை மச்சான்ஸ். WHAT TO DOOO????? அதுவும் இங்க போனஸா நம்ம சேர்ந்த கொஞ்ச நாள்லயே அவங்களுக்கு நம்மள புடிக்காம போச்சு...(நம்மோட லந்து அப்படி...) அப்புறம் DISCO போயிட்டு வந்ததெல்லாம் வேற கதை...ஐய்யயோ தப்ப நெனச்சுக்காதீங்க, இது டிஸ்கோ சாந்தி ஆடுவாங்களே அந்தேடிஸ்கோ இல்ல, இது DIS-CO, அதாவது DISCILPLINARY COMMITTEE.

என்ன பண்றது, எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

காலேஜ்ல அப்படியே நாலு வருஷமும் போச்சு....எல்லாமே போச்சேன்னு நெனச்சிட்டு இருக்கும்போதுதான், பட்டினியா இருக்குறவனுக்கு சாப்பிட தலப்பாகட்டு பிரியாணி கெடக்குறா மாதிரி நமக்கு சாப்ட்வேர் கம்பனியில வேல கெடச்சிது.

எல்ல கஷ்டமும் இன்னையோட போச்சுடான்னு நெனச்சேன். ஒரு வழியா நம்ம மேல ஆஞ்சநேயர் எபெக்ட் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சு வந்திச்சு.

வேலைல சேர்ந்த உடனே எல்லாரையும் ஹைதராபாதுக்கு டிரைனிங் அனுப்பிச்சாங்க. போன ஒரு மொத நாலஞ்சு நாள்லயே எனக்கு அது சொர்கமாதெரிஞ்சிச்சு.

"ஆஹா, திரும்பிய திசையெல்லாம் வடை, வண்ண வண்ண வடை, ஏகப்பட்ட வெரைட்டீஸ் " - ஒரு வாரம் இப்படி சந்தோசமா போயிட்டு இருந்திச்சு.

மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன் , அப்பாடா, " நோ ஆஞ்சநேயர் எபெக்ட்" - அவரு வெக்கேஷன்ல போய்ட்டார் போல அப்படின்னு.

ஆனா அடுத்த நாப்பது நாளும், கம்பனியில தாளிச்சுட்டாங்க !!!

ஒவ்வொரு வாரமும் டெஸ்ட்டு, டெஸ்ட்டுன்னு டார்ச்சர் பண்ணி, காலைல இருந்து நைட்டு வரைக்கும் ப்ரோக்ராம் எழுத சொல்லியே கொன்னுட்டாங்கமச்சான்ஸ், டெஸ்ட்டுல பெயில் ஆனா நோ வேலை. (வீட்டுக்கு திரும்ப வேண்டியது தான் )

வேலையா வடையானு வந்தபோது, இப்போதைக்கு வேலைதான் முக்கியம்னு நாங்களும் கொஞ்ச நாளைக்கி வடைக்கு லீவ் கொடுக்க வேண்டியது ஆச்சு...!!! (இப்பதான் தெரிஞ்சது ஆஞ்சநேயர் ஏன் வெக்கேஷன்ல போனாருன்னு !!!)

இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு போஸ்டிங்குக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு கேரளாவுல கொச்சின் போட்டிருக்கறதாசொன்னாங்க...!!!

ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதமான தகவல்....!!!

இவ்வளவு நாளா வெளியில இருந்தே வடையை பார்த்துட்டு இருந்து எனக்கு, அந்த வடையை சுடுற கடைலயே ஒரு வேலை போட்டு கொடுத்தா? , அப்படிதான்இருந்திச்சு எனக்கு இந்த சேதியை கேட்டவுடனே.

சரி இனிதான் நமக்கு நல்ல காலம் போலன்னு நெனச்சுக்கொட்டு கொச்சி வந்து சேர்ந்தேன். கொஞ்ச நாளைக்கு வேல எதுவுமே குடுக்காம, பெஞ்சு தேக்கவிட்டாங்க. அப்பவெல்லாம் முழு நேரமும் கேன்டீன்லதான் இருப்போம், வேறென்ன அங்க ஏதாவது கெடக்குமானுதான்.

ஆனா அங்க எல்லாம் ரொம்ப உஷாரு மச்சான்ஸ், எல்லாரும் வரும்போதே அவன் அவன் வடையை கையிலே பத்திரமா புடிச்சிக்கிட்டுதான் வருவான்.ஒன்னும் வேலைக்கு ஆகலை. சரி நம்மளும் ப்ராஜெக்டுக்குல போன இப்படிதான் இருப்போம் போலன்னு திரும்பவும் மனசுக்குள்ளயே சந்தோஷபட்டுக்கிட்டேன்.

ப்ராஜெக்டும் வந்திச்சு, என்னோட மானேஜர் வா டீம்ல உன்ன அறிமுகப்படுத்துறேன்னு கூட்டிட்டு போனார். நானும் உள்ள தைரியமா போனேன், ஆனா அங்க....

.

.

"எதிர்ல சுவத்துல ஒரு படம் மாட்டி இருந்தாங்க, என்னடான்னு உத்து பார்த்தேன்... ஒரு நிமிஷம் என் கண்ணு கலங்கி தண்ணி வர ஆரம்பிச்சிடிச்சு......வேற யார்MY LORD ஆஞ்சநேயர்தான்..!!!! "வேறன்ன இங்கயும் டீம்ல பதினஞ்சும் பசங்க. ....வடையே இல்ல....

எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

கடைசியா ஒரே ஒரு விஷயம்.... என்னடா இது வரைக்கும், ஒரு வடை கூட உன்னை கிராஸ் பண்ணலையான்னு நீங்க கேக்கலாம்...?பண்ணுச்சு மச்சான் பண்ணுச்சு...ஒரே ஒரு தரம்...காலேஜ்லபடிக்கும் போது...எங்க தெருவுக்கு புதுசா வந்தவ(டை)...

(மச்சான்ஸ் அப்படியே கொஞ்சம் உங்க MIND VOICE பாட்ட கொஞ்சம் மாத்திக்கங்க...” அது ஒரு அழகிய நிலாக்காலம்”.

இந்த விஷயத்துல ஆரம்பமே அமர்க்களமா போயிட்டு இருந்திச்சு, வழக்கமா எனக்கு மட்டும்தான் வடைய பிடிக்கும், இந்த தடவை வடைக்கும் என்னைபிடிச்சிருந்ததுன்ன பாத்துக்கங்க....ஜெட் வேகத்துல எங்க காதல் வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தேன்....

ஆஞ்சநேயர் இங்க வேற ரூபத்துல வந்தாரு..., "அவ அண்ணன் ஒரு கொரங்கு பய சார் .....! "

எங்க விசயத்த கேள்வி பட்டு, சண்டை போட்டு, கைய கடிச்சு வச்சிட்டான்... !!!

எல்லாம் - "ஆஞ்சநேயர் எபெக்ட்" - வடை போச்சே !!!!

...

பி.கு. இவ்வளவையும் படிச்சிட்டு வடைனா என்னன்னு கேட்டீங்கனா, நான் அழுதிடுவேன்....!!!

-

7 comments:

  1. நினைப்பு பொழைப்ப கெடுக்குமாம்..

    அவன் வந்து கைய கைய கடிச்சான்னு இருக்கணும் மச்சான்...

    ReplyDelete
  2. தேங்க்ஸ் வசந்த் மச்சான்....அத சரி பண்ணியாச்சு...!!!
    இது நெனப்பெல்லாம் இல்லீங்க, இதுதான் உண்மை...!!!

    ReplyDelete
  3. உங்களுக்கு என்ன மச்சான்...லார்ட் கிருஷ்ணா ஹெல்ப் பண்ணியிருப்பார்..!!!

    ReplyDelete
  4. வடைனா என்ன?? :) he ehe ehe

    ReplyDelete
  5. @ஓவியா - உனக்கென்ன மாப்பு நீ மடியிலேயே தவழ்ந்து வளர்ந்த விளையாட்டு பிள்ளை..

    ReplyDelete
  6. உங்கள் "வடை போன சோகத்தை" கூட இப்படி சொன்னால், நாங்க சிரிக்காமல் எப்படி அனுதாபம் காட்டுறது.

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...