Thursday, March 11, 2010

குட்டி என்றொரு குட்டி கதை


boy sad gloomy layout Images
அப்பா...

ம்ம்...

அப்பாஆஆ...

என்னடா..

நான் ஒன்னு கேட்பேன் நீங்க அத வாங்கி தரணும்...

என்னன்னு சொல்லு..

நீங்க மொதல்ல வாங்கி தர்றேன்னு சொல்லுங்க..

என்னென்னு சொல்லுடா...

அதெல்லாம் முடியாது, வாங்கி தர்றேன்னு சொல்லுங்க..அப்பத்தான் சொல்லுவேன்..

இப்ப உதை வாங்க போற..

எனக்கு அதோ அந்த கடைல இருக்குதுல, அந்த ரிமோட் கார் வேணும்...

குட்டி, அது விலை அதிகம்டா அப்பா உனக்கு இன்னொரு நாள் வாங்கி தர்றேன்..

ஹ்ம்ஹும்..எனக்கு இப்பவே வேணும்..

அது விலை அதிகம்டா, அப்பாகிட்ட இப்ப அவளோ காசு இல்லை....நான்தான் இன்னொரு நாள் வாங்கி தர்றேன்னு சொல்றேன்ல...

நீ இப்படிதான் எப்ப பார்த்தாலும் அப்புறமா வாங்கி தர்றேன்னு என்னை ஏமாத்திக்கிட்டே இருக்க, ஆனா வாங்கி தரவே மாட்டேங்குற...


வேணாம் குட்டி , அப்பா சொல்றத கேளு...உனக்கு வேற பொம்மை வாங்கி தர்றேன்...

அப்பா , எனக்கு அந்த மாதிரி கார் ஓட்டணும்னு ரொம்ப நாளா ஆசைப்பா...
இப்ப நீ எனக்கு வாங்கி கொடுப்பியா மாட்டியா..

நீ ஒதை வாங்க போறேன்னு நெனக்கிறேன்...ஒழுங்கா சொல்றத கேளு...  

(இடைமறித்து சத்தமாக) போ நான் கேக்க மாட்டேன், எனக்கு அந்த ரிமோட் கார்தான் வேணும்ம்ம்ம்...

(கோவத்துடன்) டே உனக்கு சொன்னா புரியாதா, அந்த கார ஓடவிட்டா எங்கயாவது ஓடிக்கிட்டே இருக்கும், உன்னால அது பின்னாடியே ஓட முடியுமா ராஸ்கல்..???

.......
.......
.......
குட்டி அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்க அவனது கண்கள் மௌனத்தின் அழுத்தத்தில் ஈரமாயிருந்தன...கண்ணீர் சத்தமில்லாமல் கசிந்தது...

அவசரத்தில் இப்படி கோவப்பட்டு விட்டோமே என்று நினைத்த அப்பா, அதை வெளிக்காட்டாமல் குட்டியின் சக்கர நாற்காலியை மெதுவாய் தள்ளிக்கொண்டு சென்றார்...!!!

(முற்றும்)

பி.கு - அப்பா அழுதது குட்டிக்கு தெரியாது...

இப்படித்தான் பல அப்பாக்களின் அழுகை எந்த குட்டிகளுக்கும் தெரிவது இல்லை...!!!

                                                                -  சிவன்

4 comments:

  1. பி.கு - அப்பா அழுதது குட்டிக்கு தெரியாது...
    இப்படித்தான் பல அப்பாக்களின் அழுகை எந்த குட்டிகளுக்கும் தெரிவது இல்லை...!!!

    ..... நெகிழ வைக்கும் உணர்வுகள்.

    ReplyDelete
  2. //அப்பா அழுதது குட்டிக்கு தெரியாது...

    இப்படித்தான் பல அப்பாக்களின் அழுகை எந்த குட்டிகளுக்கும் தெரிவது இல்லை...!!!//

    Touching machaan...

    ReplyDelete
  3. பி.கு ல கலங்க வெச்சுட்டீங்க. ஆமாங்க. அப்பாக்களின் சோகங்கள் உலகிற்கு தெரிவதில்லை :(

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி மச்சான்ஸ்....!!!
    @சித்ரா - இந்த உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம்ங்க...ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சின்ன முயற்சி...

    @சீமாங்கனி - ரொம்ப நன்றி மாப்பு...இங்கயும் ஒரேFeelings தான்.. :)

    @பின்னோக்கி - எனக்கும் இந்த வருத்தம் உண்டு மச்சான்.....இந்த விசயத்தில் நாம் 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்கவேண்டும்.... :)
    (நாங்க இன்னும் பேச்சிலர் தான்....இருந்தாலும் உங்களுக்கெல் லாம் ஒரு சப்போட்டு.. )
    :)

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...