Wednesday, September 16, 2009

காதல் பாலும் கோழி ரத்தமும்.

முதலில் காதல் பால். யார் எழுதிய கவிதையோ, இன்று என்னை களவாடி சென்றது - உன் பெயர். உன்னுடன் பேச வேண்டும் என்று நிறைய நினைத்திருந்தேன், அவை யாவும் நினைவிலேயே அழிந்தது - உனைப்பார்த்த நொடியில்.
இரு கண்ணிமைகள் தான் வாழ்ந்தன உன் பார்வை , என் மீதினில் - அதற்கே இங்கு இதயக் கோளாறு. பாவம் உன்னுடன் வரும் தோழிகள் , யாரேனும் கனியிருப்ப காய் கவர்வாரோ ? "அய்யோ" - கூடாத சொல், தமிழ் அகராதியிலே ! ஆனால் உன்னை பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் மனம் உச்ச ஸ்தாதியிலே அலறுகிறது - "அய்யோ அழகுப் பிசாசு"...! இது காதலின் முடிவு....!!! எங்கள் காதலின் இறுதி அத்தியாயம் அவளின் திருமண பத்திரிக்கையில். இனி கோழியின் காதல். உயிருள்ள கோழியின் கழுத்து ஒரு கையில் - கூரிய வெட்டருவா மறு கையில் !!! இமை துடி நேரத்தில் அருவா கழுத்தை முத்தமிட கோழியின் வெட்கம் சிகப்பாய் வழிந்தது. நாணத்தில் தலை கவிழ்ந்தது உசிரில்லா பொட்ட கோழி. காதல்அடங்காத கத்தி அன்பா பாக்குது கட்டி வச்சிருந்த அடுத்த கோழியை...!!! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- இத என்னன்னு சொல்ல....!!! ஊருக்குள் இருந்த ஒரே ஆஸ்பத்திரிக்கி இன்று விடுமுறை, டாக்டரின் நாய் செத்துப்போச்சாம் !!!
- சிவன்

1 comment:

  1. அட போங்க சிவன்!! கலந்து கட்டி கிளப்பிட்டீங்க!! ரசிக்கும் படி இருந்தது

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...