Wednesday, February 15, 2012

உன் இன்மை




புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல் 
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி 
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை 
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.

*****

மிரளச்செய்யும் அன்பு 
மிரட்சி கலந்த ஆளுமை 
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல் 
முழித்து விழிக்கையில் 
கடந்து விடுகிறது 
இன்னுமோர் இரவு!

*****

மழை விரும்பா தாவரம் 
எரிதழல் தீண்ட எஸ்கிமோ 
உன் விலகலில் நான். 
*****                                                                         - அருண்.இரா

2 comments:

  1. அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. அருமை நண்பா

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...